Sunday, August 26, 2012

TET தேர்வில் தோல்வி யார் மீது குற்றம்?


இந்திய வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ... போட்டித் தேர்வில் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்றால் அது கடந்த சூலை மாதம் 12 ஆம் தேதி நடந்த TNTET2012 தேர்வாகத்தான் இருக்கும்.

இதற்கு காரணம்...
1. வினாத்தாளின் கடினத்தன்மையா?
2. ஆசிரியர்களின் போதிய பயிற்சி இன்மையா? ( என்ன செய்கின்றன ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும்/ இளங்கலை கல்வியியல் பட்டயம் அளிக்கும் கல்வி நிறுவனங்களும்? )
3. வினாத்தாளின் கடினத்தன்மைக் கேற்ற போதிய நேரமின்மையா?
4. தேர்வு அறையில் எதிர்பாராத விதமாக.. வினாத்தாளை பார்த்த அதிர்ச்சியா?
5. காலையில் இட்லி சாப்பிட்டதாலா?
6. இரவில் தூங்காமல் படித்ததாலா?...
இப்படி என்னதான் காரணங்களை நாம் ஆராய்ந்து பார்த்தாலும்... கடைசியாக வரும் ஒரே பழி...

ஆசிரியர்களுக்கு போதிய திறன் இல்லை என்பதுதான்...

பாவம் பார்த்து... மனிதாபிமானம் பார்த்து... இரக்கப்பட்டு...  என தேர்வு வாரியம் கூறும் அனைத்தும் போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்களை ( இதில் நல்ல திறனுள்ள ஆசிரியர்களும் அடங்கிவிட்டனர் என்பதுதான் மனவருத்தம்) திட்டுவதாகவே தோன்றுகிறது.

எந்த தேர்வினை தரமான தேர்வு என்று தேர்வு வாரியமும் மனித வளத்துறையும் தன்னைதானே எக்காளமிட்டுக்கொள்கின்றன என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

இதுவரை சிறந்த ஆசிரியர் பட்டம் பெற்ற அனைத்து ஆசிரியர்களையும் அமரவைத்து இந்த வினாத்தாளை கொடுத்து எழுத சொன்னால் தெரியும்... அவர்கள் எந்தளவு சிறந்த ஆசிரியர்கள் என்று...

வினாத்தாள் கடினம் என்று ஒன்றும் இல்லை.... இதில் பாடத்தில் உள்ளவை கொஞ்சம் சிந்தித்து பதிலளிக்கும்படியாகவும்... பல  பாடபுத்தகத்தினை தாண்டிய படிக்கும் சிந்தனையை ஊக்குவிக்கும் படியாகவும் கொண்ட வினாக்களாகவுமே உள்ளன...

ஊடகங்கள் உறுமிக்கொண்டிருக்கும் ஒரு விடயம்... ஒரு சதவிகித திறமையான ஆசிரியர்கள் கூட இல்லையா? என்பது... ஆம் எந்த துறையில்தான் திறமையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள்... இன்றைய சூழலில்  பட்டம் பெறவேண்டும் பதிவு செய்யவேண்டும் என்றுதான் எல்லோரும் படித்துக்கொண்டிருக்கிறார்களே தவிர அறிவினை விருத்தி செய்துக்கொள்ள வேண்டும் அறிவினை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றல்ல...

ஒரு ஆசிரியர் என்பவர் அனைத்தையும் தம் அறிவு முதற்கொண்டு மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பவராக இருக்கவேண்டும் ஆனால், நம்மில் பலருக்கே அந்த எண்ணம் இல்லாமல் போய்விட்டது.


 இன்று தோல்வியுற்றது ஆசிரியர்கள் அல்ல மாறாக கடந்த 20 ஆண்டுகளாக பயிற்றுவித்த ஆசிரியர்கள் தான்...இந்த தேர்வு நல்ல ஆசிரியர்களை இன்று உருவாக்குமோ இல்லையோ... ஆனால் நல்ல மாணவர்களை நாளை உருவாக்கும் என்பது திண்ணம்...

2 comments:

  1. இப்படியும் சிந்திக்கலாமோ..!????

    ReplyDelete
    Replies
    1. இது என் சிந்தனை மட்டுமே... தங்களின் வீடியோ வலைபூ அருமையாக இருக்கிறது... கல்விசார் வீடியோக்களை உள்ளீடு செய்யுங்கள்...

      Delete